இத்தாலியில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப் பெருக்கு

இத்தாலி: கொட்டித் தீர்த்த கனமழை... இத்தாலி நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

எமிலியா-ரோமக்னா மற்றும் மார்ச்சே பகுதிகள் வெள்ளத்தால் பலத்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இதற்கிடையில் செசெனாவில் பல்வேறு பகுதிகள் சேற்று நீரில் மூழ்கி கிடக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

தீயணைப்புப் படையினர் இந்த வீடியோ ஹெலிகாப்டரில் சென்ற போது படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

தொடர்ந்து அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து பெரும் சேதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.