கடும் பனிப்பொழிவு 137 விமானங்கள் ரத்து... அமெரிக்கா மக்கள் அவதி

அமெரிக்கா: கடும் பனிப்புயல் காரணமாக அமெரிக்கா முழுவதும் 137 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

அங்கு கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.

இந்த பனிப்புயலால் நியூயார்க், பென்சில்வேனியா, நெவாடா, கொலராடோ மற்றும் நெப்ராஸ்கா ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனித்துகள் குவிந்துள்ளன. குளிர் வாட்டி வருவதால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால் விமான பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.