சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதை இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது. இந்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என தகவல் தெரிவித்த நிலையில்
சென்னையில் நேற்று காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. எனவே இதன் காரணமாக சென்னையில் உள்ள அரசு- தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் அதேசமயம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை அளவு குறைவாகவுள்ளதால் வழக்கம் போன்று பள்ளி கல்லூரிகள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் மழை இல்லாததால், இன்று வழக்கம்போன்று பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்து உள்ளார்.