தேனி மாவட்டத்தில் நவம்பர் 4 ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தேனி : 100 + நிறுவனங்கள் பங்கேற்பு .... தமிழகத்தில் அண்மையில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாமில் நடத்தப்பட்டது.

அதை தொடர்ந்து தற்போது தேனி மாவட்டத்தில் தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற இயக்கம் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது முகாமானது கம்பம் நகரில் உள்ள ஆதி சுஞ்சனகிரி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற நவம்பர் 4 ஆம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த முகாமில் சுமார் 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பை வழங்கவுள்ளனர்.

இதையடுத்து இதில் 8ம் வகுப்பு, 10,12, ஐடிஐ, டிப்ளமோ, டெய்லரிங், டிகிரி முடித்த அனைவரும் இதில் பங்கேற்று தங்கள் கல்வி தகுதிக்குரிய வேலை வாய்ப்பை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாமிற்கு வருகை புரிபவர்கள் கல்வி தகுதி ஆவணங்கள் மற்றும் சுயவிவரக் குறிப்பை எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.