அமெரிக்காவில் சூறாவளியால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அமெரிக்கா: பலி எண்ணிக்கை அதிகரிப்பு... அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில் வீசிய சூறாவளி மற்றும் புயல் பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிகை 26 ஆக அதிகரித்துள்ளது.

மணிக்கு 161 கிலோமீட்ட ர் வேகத்தில் வீசிய சூறாவளி காரணமாக, சில்வர் சிட்டி மற்றும் ரோலிங் போர்க் ஆகிய நகரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சூறைக் காற்றுடன் மழையும் பெய்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன. மரங்கள் சரிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சரிந்து விழுந்ததால் மின்சாரம் தடைபட்டுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினர் களமிறக்கப்பட்டு மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.