அகபுல்கோ நகரை புரட்டி போட்ட ஓட்டிஸ் சூறாவளி... மக்கள் வெளியேறினர்

மெக்சிகோ: புரட்டி போட்ட சூறாவளி... மெக்சிகோ நாட்டின் அகபுல்கோ நகரை ஓட்டிஸ் சூறாவளி புரட்டிப் போட்டதால் ஏராளமானோர் ஊரை விட்டு வெளியேறி வருகின்றனர்.

வாகனங்களில் பெட்ரோல் நிரப்ப பங்குகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அகபுல்கோ நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதும், அரசாங்கம் சார்பில் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் எதுவும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் உணவுக்காக சூப்பர் மார்கெட்டுகளுக்குள் மக்கள் புகுந்து உணவு பொருட்களை சூறையாடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஓட்டிஸ் சூறாவளியால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.