தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நலம்பெற்று மக்கள் பணிகளைத் தொடர வேண்டுகிறேன் ..அண்ணாமலை


சென்னை: தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு கடந்த சில நாட்களாகவே உடல் சற்று சோர்வாக காணப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்ததில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அவரின் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து கொண்டு வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சில நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்து உள்ளனர்.


இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டி தலைவர்கள் பலரும் தங்களது விருப்பங்களை தெரிவித்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் விரைவில் குணமடைய வேண்டுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது, உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நலம்பெற்று, மக்கள் பணிகளைத் தொடர வேண்டிக் கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.