கொரோனாவே வந்தாலும் மாஸ்க் போட மாட்டேன்; ஆர்.கே.செல்வமணி அதிரடி

மாஸ்க் போட மாட்டேன்... கொரோனாவே வந்தாலும் மாஸ்க் போடமாட்டேன் என பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். நாடு முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் நடத்தலாம் என்று கடந்த வாரம் அனுமதி அளித்த மத்திய அரசு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.

தமிழகத்தில் ஏற்கனவே டிவி சீரியல்கள் ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் சினிமா படப்பிடிப்பு குறித்து எதுவும் சொல்லவில்லை. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.கே.செல்வமணி, சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியது போல் சினிமா ஷூட்டிங்கிற்கும் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். விதிகளை முறையாக பின்பற்றி படப்பிடிப்பு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

அப்போது செல்வமணியிடம் நீங்கள் ஏன் மாஸ்க் அணிவதில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. மூச்சு விடுவதில் பிரச்சனை இருப்பதால் மாஸ்க் அணிவது இல்லை, கொரோனா வந்தாலும் பரவாயில்லை என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் ஏற்கனவே தனக்கு கொரோனா வந்து விட்டது, ஒரு மாத காலம் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன் என்று தெரிவித்தார்.