ஜனாதிபதியுடன் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சந்திப்பு

கொழும்பு: கலந்துரையாடினார்... இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகமுராவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் கலந்துரையாடியுள்ளார்.

தற்போதைய கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலான சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தையின் போது பொருளாதாரம் குறித்து கவனம் செலுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகமுராவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை பொருளாதார பிரச்னைகளுக்கு ஒரு தீர்வை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.