மும்பையில் வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

மும்பை: முக்கிய அறிவுறுத்தல் ... விபத்துகள் என்ற தலைப்பை செய்தித்தாள்களில் பார்த்தாலே நமது உள் மனதில் பெரும் பயம் வந்து ஒட்டிக் கொள்கிறது. அந்த அளவிற்கு விபத்துகள் மிகவும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.

அந்த வகையில் வாகன விபத்துகளின் மூலம் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் உயர்ந்த வகையில் உள்ளது. இதற்கு காரணம் வாகனத்தில் பயணிக்கும் போது அரசு அறிவுறுத்தியுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் முறையாக கடைபிடிக்காமல் இருப்பது தான் காரணம்.

இதனால் அரசு அவ்வப்போது மக்களுக்கு வாகனத்தில் பயணிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை அறிவுறுத்தி கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்த நிலையில், தற்போது மும்பை போக்குவரத்து காவல்துறை காரில் பயணிக்கும் போது சீட் பெல்ட் போடாமல் வண்டியை ஓட்டுவது அல்லது பயணிப்பது தண்டனைக்குரிய குற்றம்

மேலும் இவர்களுக்கு உரிய தண்டனை அளிக்கப்படும் எனவும் இந்த புதிய அறிவுறுத்தல் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.