ரயில்களில் பயணம் செய்வோருக்கு முக்கிய தகவல்

சென்னை: ரயில் பயணம் செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு ... இந்தியாவில் வரிசையாக பண்டிகை காலம் வருவதையொட்டி மக்கள் பலர் ரயில் பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் ரயில்களில் சொந்த ஊர்களுக்கும் வீடுகளுக்கும் மக்கள் செல்ல இருக்கும் நிலையில் ரயில் நிலையங்களில் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். எனவே அதனை தடுக்க ரயில்வே நிர்வாகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது.

அதாவது நவம்பர் 13 ஆம் தேதி முதல் வருகிற 19ம் தேதி வரை ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கிடைக்காது. இதனை அடுத்து இந்த தடை குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் மட்டுமே பொருந்தும்.

எனவே இந்த ரயில் நிலையங்களுக்கு செல்லும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். பிளாட்ஃபாரத்தில் அதிகப் பேர் இருக்கக்கூடாது என்பதற்காக கூட்டத்தை கட்டுப்படுத்த இந்திய ரயில்வே இந்த முடிவை எடுத்து உள்ளது.