ஒரே நாளில் கனடாவில் 395 பேர் கொரோனாவால் பாதிப்பு

கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் 395 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 4பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் கனடாவிலும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 18ஆயிரத்து 187ஆக உயர்ந்துள்ளது.

மேலும், எட்டு ஆயிரத்து 962 பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், ஆறாயிரத்து 437 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து 788 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இது தவிர, இரண்டு ஆயிரத்து 263 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.