தமிழகத்தில் தேசிய கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும் திராவிட கட்சிகளின் தலைமையிலேயே கூட்டணி அமையும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் கொரோனோ பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு தயாரித்து வழங்கப்பட்டு வரும் உணவகத்தை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வினய், மற்றும் மாநகராட்சி ஆணையர் விஷாகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், தமிழகத்தில் தேசிய
கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும், திராவிட கட்சிகளே கூட்டணிக்கு தலைமை
வகிக்கின்றன என்றார். அதிமுக மற்றும் திமுகவில் இதே நடைமுறை தான்
பின்பற்றப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.