இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 2 மடங்கு உயர்வு

இந்தியா: இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது ... இந்தியாவில் கடந்த ஒரு மாத காலமாகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 3000 – ஐ கடந்து விட்டது.

இதனை அடுத்து கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,824 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நேற்று ஒரே நாளில் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

டெல்லி, கேரளா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு உயர்வதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,389 – ல் இருந்து 20,129 ஆக அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கொரோனா அதிக அளவு பரவி கொண்டு வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது. எனவே இதனை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.