காதல் திருமணத்தால் மதம் மாற்றப்படும் சம்பவங்கள்... துணை முதல்வர் தேவேந்திர பத்னாவிஸ் தகவல்

மகாராஷ்ட்ரா: காதல் திருமணத்தால் மதம் மாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகிறது என்று துணை முதல்வர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்ட்ராவில் காணாமல் போனவர்கள் குறித்த விசாரணையில், காதல் திருமணத்தால் மதம் மாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருவது கண்டறியப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய பத்னாவிஸ், அரசின் நடவடிக்கைகளால் காணாமல் போன நபர்கள் எண்ணிக்கை 90 சதவீதம் குறைந்திருப்பதாகக் கூறினார்.

விரைவில் இதற்காக சட்டம் ஒன்றும் அமலுக்கு வர இருப்பதாகவும் பத்னாவிஸ் கூறினார்.