அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ரெய்டு ..... தமிழக அரசின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் தற்போது வருமான வரி சோதனை நடைபெற்று கொண்டு வருகிறது.

சென்னை, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி கொண்டு வருகின்றனர்.

இதனை அடுத்து கரூர் ராமேஸ்வர பட்டியில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் ஐடி ரெய்டு நடந்து வருகிறது.

அதேபோன்று கோவை கோல்ட் வின்ஸ் பகுதியில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் செந்தில் கார்த்திகேயன் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவரின் வீட்டில் வருமான வரிசோதனை நடத்தப்பட்டு வருவது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. .