அந்தமானில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு...சாவு எண்ணிக்கையும் 44 ஆக உயர்வு

அந்தமானில் நேற்று புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,081 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சாவு எண்ணிக்கையும் 44 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் பிற பகுதிகளைப்போல அந்தமான்-நிகோபார் தீவுக்கூட்டங்களிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அங்கு நேற்று புதிதாக 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,081 ஆக உயர்ந்துள்ளது.

இதைப்போல கொரோனா நோயாளிகள் இருவர் நேற்று உயிரிழந்தனர். இதன் மூலம் சாவு எண்ணிக்கையும் 44 ஆக அதிகரித்தது.

அந்தமானில் தொற்று பாதித்தவர்களில் 2,519 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 518 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்கு பல்வேறு முகாம்கள் மூலம் அதிக எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் ஏராளமான பழங்குடியினர் பயன்பெற்று வருகின்றனர்.