பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து உயர்வு

ஈரோடு : தண்ணீர் வரத்து உயர்வு ..... பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததின் காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதனால் இந்த ஆண்டில் 2-வது முறையாக நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. இந்த மாத இறுதிவரை அணையின் பாதுகாப்பை கருதி 102 அடிக்கு மேல் தண்ணீர் நிறுத்த முடியாத காரணத்தால் பவானி ஆற்றின் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது.

இதனால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து இந்த நிலையில் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பவானி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.