மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 24 ஆயிரம் இருந்து 29 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

சேலம், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தி அதிகரித்தது. கடந்த 16-ம் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

இதனையடுத்து அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 24,000 கனஅடியில் இருந்து 29,000 கனஅடியாக உயர்ந்துள்ளது .

இதனால் அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 28,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது