செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 1,000 கனஅடியாக அதிகரிப்பு

சென்னை:சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. நீர் இருப்பை கண்காணிக்கும் பணிகளில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். இச்சூழலில் 24 அடி உயரம் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் 22.29 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. எனவே இதன் காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரியின் 19 கண் மதகில், 3 ஷட்டர்கள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்ட நிலையில், கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது.


இச்சூழலில் சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவை 200 கன அடியிலிருந்து, 1,000 அடியாக அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 1,000 கனஅடியாக உயர்ந்து உள்ளது.

இதையடுத்து நீர் வரத்து அதிகரிப்பால் வினாடிக்கு 200 கனஅடியில் இருந்து 1,000 கனஅடியாக நீர் வெளியேற்றப்படுகிறது. எனவே ஏரியில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது..