உக்ரைன் விவகாரத்தில் யதார்த்தமான தீர்வை இந்தியா தெரிவிக்கிறது: ரஷ்யா பாராட்டு

ரஷ்யா: இந்தியாவுக்கு பாராட்டு... உக்ரைன் விவகாரத்தில் மிகவும் யதார்த்தமான தீர்வை இந்தியா தெரிவித்து வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா மத்தியில் ஓராண்டை கடந்தும் தொடர்ந்து நடந்து வருகிறது. இருதரப்பிலும் வெகுவாக உயிர் சேதங்கள் நடந்துள்ளது.

இந்நிலையில் மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன் போரை நிறுத்த உடனடியாக உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்றும், பகையுணர்வு களையப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியதை சுட்டிக் காட்டினார்.

இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்ரிக்கா, எகிப்து போன்ற நாடுகள் நேர்மையான முறையில் யதார்த்தமான தீர்வுகளுக்கு யோசனைகள் தெரிவித்திருப்பதாக செர்கய் தெரிவித்தார்.