கிரிப்டோ கரன்சி சிக்கல்கள் குறித்து இந்தியா- இங்கிலாந்து கலந்துரையாடல்

லண்டன்: கிரிப்டோ கரன்சி சிக்கல்கள் குறித்து விவாதம்... நிதித்துறையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த லண்டனில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து பங்குச் சந்தை தொடர்பான கலந்துரையாடலின் இரண்டாவது கூட்டத்தில் கிரிப்டோ கரன்சியின் சிக்கல்கள் விவாதிக்கப்பட்டன.

இந்தியா தனது ஜி20 தலைமைப் பதவிக்கான முன்னுரிமைகளின் ஒரு பகுதியாக கிரிட்டோ-சொத்துகள் மற்றும் டிஜிட்டல் கட்டண முறைகளுக்கு உலகளாவிய கூட்டு அணுகுமுறையை வலியுறுத்தி வருகிறது.

நாடு கடந்து பணம் செலுத்தும் கிரிப்டோ முறைக்கு பரந்த ஒத்துழைப்பின் அவசியத்தை இந்தியா மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகள் புதன்கிழமை விவாதித்தனர். நேற்றைய கலந்துரையாடலில் வங்கி முறைகள், பணம் செலுத்துதல் மற்றும் கிரிப்டோ-சொத்துகள், காப்பீடு.

மறுகாப்பீடு, மூலதனச் சந்தைகள், சொத்து மேலாண்மை மற்றும் நிலையான நிதி என்று ஆறு தலைப்புகளில் கவனம் செலுத்தியது