பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி

நியூயார்க்: இந்தியா பற்றிய தேவையில்லாத விஷயங்களை பாகிஸ்தான் எழுப்புவதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். மேலும் ஐநா. மனித உரிமைகள் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவின் காஷ்மீர் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி ஜக்ப்ரீத் கவுர் , நியுயார்க்கில் ஐநா.மனித உரிமைக் குழுவின் 52வது கூட்டத்தின் 17வது அமர்வில பேசும்போது, இந்தியா பற்றிய தேவையில்லாத விஷயங்களை பாகிஸ்தான் எழுப்புவதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார். அரசியல் ரீதியான அடக்குமுறைகள் ஆக்ரமிப்பு காஷ்மீர் மக்கள் மீது ஏவப்படுகிறது.

காஷ்மீர் பற்றிய பாகிஸ்தானின் எந்த ஒரு கேள்வியும் பதில் அளிக்கக்கூட தகுதியற்று இருப்பதாகத் தெரிவித்தார்.