பயணிகள் வரத்து “டல்”... ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து

சென்னை: ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து... போதிய எண்ணிக்கையில் பயணிகள் வராததால் சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அவற்றில் கொழும்பு சென்று வரும் 2 சர்வதேச விமான சேவைகளும் அடக்கம். அதுதவிர, சென்னைக்கும் ஷீரடி மற்றும் திருவனந்தபுரத்துக்கும் இடையிலான சேவைகளையும் விமான நிறுவனங்கள் ரத்து செய்தன.

இந்த விமானங்களில் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவித்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோடை விடுமுறை முடிந்து விட்டதால், பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதே விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் என்று விமான நிறுவனத்தினர் கூறினர்.