கொரோனா தடுப்பு மருந்து தயாராகி விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரல்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உலகில் முதல் நாடாக ரஷ்யா தடுப்பு மருந்து கண்டறிந்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.

ரஷ்யாவின் மருத்துவ பல்கலைக்கழகம் கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்யும் தடுப்பு மருந்தின் சோதனைகள் நிறைவுற்றுவிட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்ததில், ரஷ்யா கொரோனா வைரஸ் பாதிப்புக்கான தடுப்பு மருந்தின் முதற்கட்ட சோதனையை நிறைவு செய்துள்ளது என தெரியவந்துள்ளது. மேலும் இந்த மருந்து அதிகளவு சோதனைகளை கடக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட சோதனை வெற்றி பெற்றதை, முழு மருந்தும் பயன்படுத்த தயார் நிலையில் இருப்பதாக செய்தி வெளியிட்டதே இந்த வைரல் தகவல்களுக்கு காரணம் ஆகும். இதன் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ரஷ்யா தடுப்பு மருந்தை கண்டறியவில்லை என உறுதியாகிவிட்டது.