தேர்தல் விதிமுறைகளை வேட்பாளர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே பீகாரில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளன.
கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால், அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டம்
கூடுவதை தவிர்க்கும் விதமாக, இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல்
கட்சிகளின் தலைவர்கள், பொதுச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்
எழுதியுள்ளது. அதில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை வேட்பாளர்கள்
கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை
மீறக்கூடிய வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் பிரச்சார கூட்டங்களின்
ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தரப்பில்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.