மணிப்பூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இணையதள சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்

மணிப்பூர் : மணிப்பூரில் இன்று முதல் மீண்டும் இணைய சேவை தொடக்கம் ... மணிப்பூர் மாநிலத்தில் 2 பிரிவினருக்கும் இடையிலான பிரச்சனையின் காரணமாக கடந்த மே மாதம் முதல் கலவரங்கள் நடந்து கொண்டு வருகிறது.

இதனை அடுத்து கலவரத்தின் தீவிர தன்மையை குறைப்பதற்காக கடந்த ஜூன் மாதம் முதல் மணிப்பூர் மாநிலத்தில் இணையதள சேவைகள் தடை செய்யப்பட்டிருந்தது.

போராட்டம் மிகவும் தீவிரம் அடைந்த நிலையில் கட்டுப்படுத்துவதற்காக மாநில மற்றும் மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வந்தது.


மேலும் மணிப்பூர் மாநில கலவரத்தின் போது நடந்த அசம்பாவிதங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கும் அளவிற்கு பதைபதைக்க வைத்தது.

தற்போது கலவரம் ஓய்ந்து உள்ள நிலையில் செப்டம்பர் 23ஆம் தேதி ஆன இன்று முதல் மணிப்பூரில் மீண்டும் பொதுமக்களுக்கு இணைய சேவை வழங்கப்படும் என மாநில முதல்வர் பிரேம் சிங் அறிவித்துள்ளார்.