தனது பாதுகாப்புக்காக குடி மக்களை உளவாளிகளாக்குகிறாரா சீன அதிபர்?

சீனா: சர்ச்சையான விவகாரம்... தமது பாதுகாப்புக்காக ஜி ஜின்பிங் குடிமக்களை உளவாளிகளாக்குவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

பாதுகாப்புக்காக ராணுவத்தை பலப்படுத்தி வரும் ஜி ஜின்பிங், தற்போது மாணவர்களையும் சாதாரண குடிமக்களையும் உளவாளிகளாக மாற்றி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பாதுகாப்பு வெளிநாட்டு மிரட்டல்களால் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் உளவுபார்ப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு பாடத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

ஏரோநாட்டிக்ஸ் பயிற்சி அளிக்கும் ஒரு பல்கலைக்கழம் சீன ராணுவத்துடன் தொடர்பு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு, அமெரிக்காவால் பொருளாதார ரீதியான தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு உளவாளிகள் யார் என்றொரு பயிற்சி விளையாட்டு மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.