பாலஸ்தீனர்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பதும் முக்கியம்... வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இத்தாலி: தீவிரவாதத்தை ஏற்க முடியாதது, அதே நேரத்தில் பாலஸ்தீனர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது முக்கியம் என்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்தை ஏற்க முடியாதது, அதே நேரத்தில் பாலஸ்தீனர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது முக்கியம் என்று இத்தாலிக்கு சென்றுள்ள இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இத்தாலியில் வெளியுறவுத் துறைக்கான செனட் உறுப்பினர்களிடையே பேசிய அவர், அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் நடந்தது கொடூரமான தீவிரவாதத் தாக்குதல் என்றும், இருந்தாலும் பாலஸ்தீன மக்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அங்கு மீண்டும் ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும் என்றும், அப்பகுதியில் தொடர்ந்து மோதல் நீடிக்கக் கூடாது என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.