வரும் 2030க்குள் ஜப்பானின் மக்கள் தொகை அதல பாதாளத்திற்கு செல்லும் என அச்சம்

ஜப்பான்: வரும் 2030-க்குள் ஜப்பானின் மக்கள்தொகை அதல பாதாளத்திற்கு சென்று விடும் என அஞ்சப்படுகிறது.

ஜப்பானின் பிறப்பு விகிதம் 2022 ஆம் ஆண்டில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக 1.26 ஆகக் குறைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்கம் பல்வேறு சலுகைகளை அறிவித்த போதிலும் குழந்தை பெற்றுக்கொள்வது குறைந்து வருகிறது. இதனால் வரும் 2030-க்குள் ஜப்பானின் மக்கள்தொகை அதல பாதாளத்திற்கு சென்று விடும் என அஞ்சப்படுகிறது.

125 மில்லியனுக்கும் அதிகமான ஜப்பானின் மக்கள்தொகை 16 ஆண்டுகளாக குறைந்து வருகிறது. 2070ஆம் ஆண்டு 87 மில்லியனாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீனாவிலும் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக அந்நாட்டு அரசாங்கம் விதித்திருந்த கட்டுப்பாடுகளை நீக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.