வரும் 8ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகிறது என்று தகவல்

சென்னை: வரும் மே 8ம் தேதி பிளஸ்-2 ரிசல்ட் வெளியாகிறது என்று கல்வித்துறை தரப்பில் தெரிவித்துள்ளது.

மே 5ம் தேதி ரிசல்ட் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீட் தேர்வு காரணமாக தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு 7ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கு அடுத்த நாள் மே 8ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in / www.dge1.tn.nic.in இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்கள் வழங்கிய கைப்பேசி எண்ணிலும் தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் வாயிலாக அனுப்பப்படும்