ஆஸ்திரேலியா செல்ல உள்ள பிரதமர் மோடிக்கு ஆபத்து என தகவல்

புதுடில்லி: பயங்கரவாத அமைப்புகளால் ஆபத்து... பிரதமர் மோடி இம்மாதம் 24ம் தேதி குவாட்மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா செல்ல உள்ளார். அவருக்கு காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளால் ஆபத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இங்கிலாந்து எண் கொண்ட ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து ஆஸ்திரேலியாவில் பிரதமர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு மிரட்டல் வந்துள்ளது.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கலந்துக் கொள்கிறார். காலிஸ்தான் பயங்கரவாதிகளின் மிரட்டலையடுத்து பிரதமர் மோடியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.