தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களின் வளர்ச்சி பணிகள் பற்றி கள ஆய்வு மேற்கொள்கிறார்.

எனவே இதற்காக இன்று சாலை மார்க்கமாக விழுப்புரம் செல்கிறார். கள ஆய்வுப் பணிகளை முடித்துக்கொண்டு நாளை மாலை சென்னை திரும்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

அதனை அடுத்து நாளை மறுநாள் (28 ஆம் தேதி) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை , முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

தமிழகத்தில் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறது தமிழக அரசு . ஆகைக்யால் குடியரசுத் தலைவர் உடனான இச்சந்திப்பின் போது ஆளுநரின் செயல்பாடுகள் குறித்த கோரிக்கை வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் முக்கியமாக சட்டபேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதக்களுக்கு ஆளுநர்கள் முடிவெடுக்க குறிப்பிட்ட கால நிர்ணயம் வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்துவார் எனவும் தெரிகிறது. இதையடுத்து இச்சூழலில் முதல்வரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.