75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜப்பானில் கொட்டி தீர்த்த கனமழை

ஜப்பான்: 75 ஆண்டுகளில் இல்லாத கனமழை... கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜப்பானில் கொட்டித்தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

ஜப்பான் நாட்டின் யமாகுச்சி மற்றும் குனிமி நகரங்களில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை கொட்டித்தீர்த்தது.

அதை தொடர்ந்து அஸா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அருகிலுள்ள குடியிருப்புகள் நீர் சூழ்ந்து காணப்பட்டன.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரிலிருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மாயமான இருவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.