இத்தாலி இளைஞரை காதலித்து திருமணம் செய்த கேரள பெண்

கேரளா: வெளிநாட்டு இளைஞருடன் திருமணம்... விமான பயணத்தின் போது அறிமுகமான இத்தாலியைச் சேர்ந்த இளைஞரை, கேரள இளம்பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பாலக்காட்டைச் சேர்ந்த இளம்பெண் வீணா உயர்கல்விக்காக கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்கா சென்ற போது, விமானத்தில் அவருடன் பயணித்த இத்தாலியைச் சேர்ந்த டேரியோ என்ற இளைஞருடன் அறிமுகமானார்.

நட்பாக பழகிய இருவருக்கும் காதல் மலர்ந்தது. 6 ஆண்டுகளாக காதலித்து வந்த வீணாவும் டேரியோவும் அமெரிக்காவில் பதிவு திருமணம் செய்துக் கொண்டனர்.

இந்நிலையில், கேரளாவுக்கு வந்த காதல் ஜோடி பெற்றோர் மற்றும் உறவினர் முன்னிலையில், கேரள கலாச்சாரப்படி மாலை மாற்றி திருமணம் செய்துக் கொண்டனர்.