தனது மகளுடன் பொது வெளிகளில் தலைக்காட்ட தொடங்கியுள்ள கிம்

வடகொரியா: இதுவரை தனது பிள்ளைகளை உலகிற்கு காட்டாத கிம், தற்போது தனது மகளுடன் பொதுவெளிகளில் தலைகாட்டத் தொடங்கியுள்ளார்.

வடகொரியாவில் இடம்பெறும் பல விடயங்கள் உலக பார்வைக்கும் மறைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வடகொரியா தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

அதற்கு காரணம் வடகொரிய அதிபர் கிமின் மகள் ஜுஏ தான். இதுவரை தனது பிள்ளைகளை உலகிற்கு காட்டாத கிம், தற்போது தனது மகளுடன் பொதுவெளிகளில் தலைகாட்டத் தொடங்கியுள்ளார்.

அந்தவகையில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தனது மகளான கிம் ஜு ஏவுடன் ஆறாவது முறையாக பொதுவெளியில் தோன்றியுள்ளார். கால்பந்து விளையாட்டு போட்டி ஒன்றுக்காக ஜுஏ அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சமீபகாலமாக ஜுஏ தனது தந்தையுடன் பல பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இது வடகொரிய ஆட்சியில் முக்கியமான தாக்கத்தை செலுத்த கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே வடகொரியாவில் ஜுஏவின் பெயர் வேறு பெண்களுக்கு வைக்கப்பட்டிருந்தால் உடனடியாக மாற்றுமாறும் கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.