தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை: இன்று புதிதாக 67 பேருக்கு கொரோனா உறுதி ,,,,, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருவது மக்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. அந்த வகையில் இன்றைய பாதிப்பு 70 க்கும் கீழ் குறைந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- தமிழகத்தில் இன்று 67 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு 10-க்கும் கீழ் பதிவாகியுள்ளது. மருத்துவமனையில் 188 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி 674 பேர் சிகிச்சையில் உள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.