மக்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குள் நுழைந்த சிறுத்தை

மக்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குள் நுழைந்த சிறுத்தை செம ஹாயாக சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தென் ஆப்பிரிக்காவில் வனப்பகுதியை ஒட்டி கட்டப்பட்டிருந்த ஹோட்டலுக்குள் சிறுத்தை ஒன்று சாவகாசமாக வந்து சென்றது.

சிங்கிட்டா வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள ஹோட்டலுக்குள் வந்த சிறுத்தை ஒன்று அங்கிருந்த பணியாளர்களை சிறிதும் கண்டு கொள்ளாமல் அவர்களுக்கு அருகாமையில் உலாவிக் கொண்டிருந்தது.

ஹோட்டலின் மேல் தளத்திற்குச் சென்ற அந்த சிறுத்தை சுற்று முற்றும் பார்த்து விட்டு அங்கிருந்து சென்றது. இந்த ஹோட்டல் கட்டப்பட்டுள்ள பகுதியில் வெர்வட் வகைக் குரங்குகள் அதிகம் காணப்படும்.

எனவே அவற்றை வேட்டையாடுவதற்காக இந்தச் சிறுத்தை வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.