மதுரையில் ஜூலை 4 மின்தடை...மின்சார வாரியம் அறிவிப்பு

மதுரை: தமிழகத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் மின்சார பராமரிப்பு செய்யப்படும் பகுதிகள் பற்றியும், அதனால் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்தும் மின்சார வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிடும். அதன் படி மதுரை மாடக்குளம் பகுதியில் வருகிற ஜூலை 4 ஆம் தேதி மின்சாரா பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.

இது குறித்து மதுரை மாவட்ட அரசரடி மின்வாரிய செயற்பொறியாளர் பழனி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் பசுமலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வருகிற ஜூலை 4 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

அதனால் அங்கிருந்து மின்சார விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுமலை துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி மாடக்குளம் மெயின் ரோடு, கந்தன்சேர்வை நகர் முழுவதும், தேவி நகர், கிருஷ்ண நகர், சபரி நகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யா நகர், செரூப், பெரியார் நகர், மல்லிகை கார்டன், அய்யனார் கோவில், சத்தியமூர்த்தி நகர், அருள்நகர், அவர்லேடிபள்ளி, காயத்திரி தெரு, பிரீத்தம் தெரு, உதயா டவர், துரைச்சாமி நகர், சவுபாக்கியா நகர், துர்கா நகர், லைன்சிட்டி, எஸ்.ஆர்.வி. நகர், அமைதிசோலை, சுந்தர்நகர், ஜே.ஜே.நகர், ஹார்விபட்டி ஆகிய இடங்களில் மின்சாரம் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.