மதுரை- பழனி 12-ந் தேதி…… சிறப்பு ரெயில் இயக்கம்

மதுரை: வைகாசி விசாகம் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக மக்களிடத்தில் வெகுவிமர்சையாக கொண்டாப்படுகிறது. இவ்விழாவில் ஆயிரணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் அறுபடை வீடுகள் உள்பட முருகன் கோயில்களில் வரும் 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

பழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக மதுரை- பழனி இடையே சிறப்பு ரெயிலை இயக்க மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை- பழனி இடையே சிறப்பு ரெயில் வருகிற 12-ந் தேதி மதுரை ரெயில் நிலையத்திலிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.25 மணிக்கு பழனி ரெயில் நிலையம் சென்றடையும். மறுமார்க்கத்தில் பழனியில் இருந்து ஒரு சிறப்பு ரெயில் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடையும்.

சிறப்பு ரெயில், இருமார்க்கங்களிலும் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.