கோவையில் கொரோனாவால் பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை

கொரோனாவால் பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கோவையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தெக்கலூர் பகுதியை சேர்ந்த 26 வயதான கர்ப்பிணி பெண் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அந்த பெண்ணுக்கு 3.3 கிலோ கிராம் எடையுடன் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ”தாயும், சேயும் நலமாக உள்ளனர். இதுவரை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 16 கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்த்துள்ளோம். அனைவரும் நலமாக உள்ளனர்.” என்றார்.