முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை சந்தித்த மங்கள சமரவீர

பேச்சுவார்த்தை... முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

ஹொரகொல்ல பிரதேசத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் இல்லத்தில் இச்சந்திப்பு நடந்தது. இதில் இருவரும் நீண்ட நேரம் தற்கால அரசியல் நிலவரம் குறித்து ஆராந்துள்ளனர்.

எனினும் இருவருக்கும் இடையே பேசப்பட்ட விடயங்கள் வெளியாகவில்லை. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இருந்து விலகிய மங்கள சமரவீர தொடர்ந்து மக்களுக்கான தமது சேவை தொடரும் என அறிவித்திருந்தார். அண்மையில் சந்திரிகாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தேர்தலில் இருந்து விலகியுள்ள இருவரும் சந்தித்துக்கொண்டமை தொடர்பில் பல கேள்வியை எழுப்பியுள்ளது.