சென்னை மெட்ரோ ரெயில்.... பயணிகளுக்கு இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு மள மளவென உயர்ந்து மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து உயர்ந்ததால், இதை கட்டுப்படுத்தும் விதமாக அரசு மீண்டும் சில கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. அதன்படி தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்கும் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் நிலையம் வந்து செல்லும் பயணிகளும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.