புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம்

புதுச்சேரி: அதிகரிக்கும் கொரோனா மாஸ்க் கட்டாயம் .... கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் புதுச்சேரியில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,000 தாண்டிய நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து புதுச்சேரியில் கொரோனா பரவல் 15% எட்டியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகமாக கூடும் கடற்கரை, சந்தை, திரையரங்கு உள்ளிட்ட இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

மேலும் பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எனவும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரியும், புதுச்சேரி மாவட்ட ஆட்சியருமான வல்லவன் அவர்கள் அறிவித்துள்ளார்.