மெட்ரோ ரயில் பயணிகளே... இனி உங்கள் வாகனங்கள் நிறுத்த ஒரு முக்கிய அறிவிப்பு

சென்னை: சென்னை நகர மெட்ரோ ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் வாகனங்களை நிறுத்த மெட்ரோ ரயில் பயண அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாம்.

இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட முதன்மை நகரங்களில் தான் முதல் கட்டமாக மெட்ரோ ரயில் சேவை, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் தொடங்கப்பட்டது. எனவே அதன்படி, சென்னை நகர மெட்ரோ ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இதற்கு முன்னதாக மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க கட்டண வாகன நிறுத்துமிடம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இத்தனை நாட்கள் இதற்காக நேரடி பண வசூல் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அனைத்து மெட்ரோ ரயில் வாகன நிறுத்துமிடத்திலும், மெட்ரோ ரயில் பயண அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும், நேரடி பணப்புழக்கத்தை குறைக்கவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம் அனைத்து மெட்ரோ ரயில்களிலும் பயணிக்கவும் முடியும்.