இந்த மாவட்டங்களிலும் விரைவில் மெட்ரோ ரயில் சேவை

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் நிலையில் கோவை மற்றும் மதுரையிலும் மெட்ரோ ரயில்களுக்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் திருச்சி சேலம் மற்றும் நெல்லை மாவட்டங்களிலும் மெட்ரோ ரயில் விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னையை அடுத்து மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன என்பதும் இன்னும் 2 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சேலம் திருச்சி நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் மெட்ரோ ரயில் சேவை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளின் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

இதையடுத்து இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மெட்ரோ நிர்வாகம் சேலத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் ஏப்ரலில் நிறைவு நிறைவு பெறும் எனவும் திருச்சி, நெல்லையில் மேற்கொள்ளப்படும் பணிகள் மே மாதம் நிறைவடைந்து அதன் பின்னர் தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது