மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 94.36 அடியாக உயர்வு

மேட்டூர் அணையில் இருந்து குறைந்தளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

கர்நாடகா மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மற்றும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று 6,497 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 7,770 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் 3ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாயில் 800 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரைவிட அணையில் இருந்து குறைந்தளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 94.09 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 94.36 அடியாக உயர்ந்தது.