இங்கிலீஷ் கால்வாயைக் கடக்க முயன்ற புலம்பெயர் தொழிலாளர்களின் படகு கவிழ்ந்து விபத்து

இங்கிலாந்து: படகு கவிழ்ந்து விபத்து... இங்கிலாந்தின் இங்கிலீஷ் கால்வாயைக் கடக்க முயன்ற புலம்பெயர் தொழிலாளர்களின் படகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.

கடந்த சனிக்கிழமையன்று 10க்கும் மேற்பட்ட படகுகள் ஒரே நேரத்தில் இங்கிலீஷ் கால்வாயை கடக்க முயன்ற போது இந்த விபத்து நேரிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கியிருந்த 50க்கும் மேற்பட்டவர்களை இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் படையினர் மீட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.