பொது தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி

சென்னை:பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு ...10, 11, 12 ஆம் வகுப்பு களுக்கான பொது தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி இன்று வெளியிட்டார். அதன்படி பத்தாம் வகுப்புக்கு வருகிற மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை பொது தேர்வு நடைபெறுகிறது.

இதனை அடுத்து அதேபோன்று 11ம் வகுப்புக்கு மார்ச் 4-ம் தேதி தொடங்கும் பொது தேர்வானது மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் 12ஆம் வகுப்புக்கு மார்ச் 1ம் தேதியே பொது தேர்வு தொடங்கும் நிலையில் 22 ஆம் தேதி வரை நீடிக்கிறது.

ஆனால் அதேசமயம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மே 10ம் தேதி தேர்வு முடிவுகளும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மே 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மே 6ஆம் தேதியே தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

இதையடுத்து 10-ம் வகுப்புக்கு செய்முறை தேர்வு வருகிற பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 29ஆம் தேதி முடிவடைகிறது. 11ஆம் வகுப்புக்கு செய்முறை தேர்வு ஆனது பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 24ஆம் தேதி முடிவடைகிறது. 12ஆம் வகுப்புக்கு செய்முறை தேர்வுகள் ஆனது பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.