கொரோனாவால் பாதித்த அமைச்சர் துரைக்கண்ணு உடல் கவலைக்கிடம்

கொரோனா பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள
வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூச்சு திணறல் காரணமாக கடந்த 13 ம் தேதி, விழுப்புரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில் அவருக்கு எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி. சண்முகம், சி.விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் மருத்துவமனை சென்று, மருத்துவர்களிடம் துரைக்கண்ணு உடல்நிலை குறித்து விவரம் கேட்டறிந்தனர்.